Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! ஆசிரியையை பழிவாங்க… “25 குழந்தைகளுக்கு உணவில் விஷம்”… வைத்த மற்றொரு ஆசிரியை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உடன் பணிபுரியும் ஆசிரியரை பழிவாங்க மழலை மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஹெனான்  மாகாணத்தை சேர்ந்த Wang என்ற  ஆசிரியர் சக ஆசிரியரான Sun என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்து  Sun ஆசியையின் மாணவர்கள் சாப்பிடும் உணவில் Wang விஷத்தை கலந்தார். இதனை தொடர்ந்து Sun-ன்  கிண்டர்கார்டன் மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிட்ட போது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் Wang-ஐ கைது செய்தனர். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் தனது கணவருக்கு Wang விஷம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த வளாக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |