தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் கொரோனா தடுப்பு பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும், சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் சிறப்புடன் செய்து வந்த தமிழ்நாடு அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதே போல பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்ததாகவும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நோய் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதை ஏற்று மத்திய அரசை கொரோனா நிவாரணத்திற்கு தடுப்பிற்கு போதுமான நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதே போல ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நீட் தேர்வில் விலக்கு, இருமொழிகொளகை என 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.