போபால் அருகே லூடோ விளையாட்டில் ஏமாற்றிய தந்தை மீது மகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தலைமுறையினர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்வதால் சில சமயம் வாழ்க்கை விளையாட்டை போல் அவர்களுக்கு கேலியாக அமைந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் பப்ஜி, free fire உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக இருப்பது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பெண்கள் லூடோ உள்ளிட்ட விளையாட்டுக்கு அடிமையாக உள்ளனர். அந்த வகையில்,
லூடோ விளையாட்டில் தன் தந்தை ஏமாற்றி விட்டதாக கூறி, 24 வயது இளம்பெண் ஒருவர் போபால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இனி தன் தந்தையை ‘அப்பா’ என்று அழைக்க பிடிக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதையடுத்து சாதாரண விளையாட்டிற்காக இப்படி மன ரீதியாக பாதிக்கப் படுவதா என சிந்தித்து அப்பெண்ணுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.