சபரிமலையில் மேல்சாந்தி தேர்வு அக்டோபர் 17-ல் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கிறது.
சபரிமலையில் அனைத்து பூஜைகளுக்கும் தலைமை வகிப்பவர் தந்திரி, தால் அம்மன் குடும்பத்தில் கண்டரு ராஜிபரு, கண்டரு மகேஷ் மோகனரு ஆகியோர் சுழற்சிமுறையில் இதை கவனிக்கின்றது. இவர்களுக்கு உதவியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுவார். தற்போதைய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி பதவிக்காலம் வரும் அக்டோபர் பதினாறாம் தேதி நிறைவு பெறுகிறது. அடுத்த மேல்சாந்தி தேர்வு செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்கான நேர்காணல் அக்டோபர் ஐந்து, ஆறாம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடக்கின்றது.
இதில் வெற்றி பெறுபவர்களில் ஒருவர் அக்டோபர் 17 -ல் சபரிமலை சன்னிதானத்தில் நடக்கும் குழுக்கள் தேர்வில் தேர்வு செய்யப்படுவார். இவர் கார்த்திகை 1-ம் தேதி முதல் ஒரு ஆண்டுகாலம் சபரி மலையில் தங்கி பூஜைகள் செய்வார். மாளிகை புறம் கோவிலுக்கும் இதே முறையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும். ஐப்பசி மாதம் பூஜைகளுக்கான சபரிமலை நடை அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.