திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164 நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சிலர் தளர்வு அளித்தது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று பூங்காக்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் கோக்கர்ஸ் வாக் பகுதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து, சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.