உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்கள், மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்வதற்கு பி.சி.சி.ஐ தடைவிதித்துள்ளது.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகின்ற மே 30ம் தேதி முதல் தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் வரை நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நீண்ட நாள் கிரிக்கெட் தொடரின் போது மனைவி மற்றும் காதலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஆனால் உலக கோப்பை தொடர் முக்கியமான ஓன்று என்பதால் இந்திய அணியினர் முதல் 20 நாட்கள் வரை தங்களின் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தடைவிதித்துள்ளது. 20 நாட்கள் முடிந்த பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், அவர்கள் வீரர்கள் செல்லும் பஸ்சில் அவர்களுடன் இணைந்து செல்லக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.