பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோகாஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்கள் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர்.
அநீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இரண்டாவது நாளாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பேராசிரியர்களை பச்சையப்பன் கல்லூரிக்குள் விடாமல் நிர்வாகம் கேட்டை பூட்டியதால் பேராசிரியர்களும் கல்லூரியில் புதிதாக சேர வந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பலமணிநேரம் சாலையில் காத்திருந்தனர். பின்னர் போராடி உள்ளே சென்ற பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.