கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை தவறான அணுகுமுறைகளின் மூலம், கொள்கைகளின் மூலம் பாதிப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி வரி வகுப்பு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. எனவே பழைய வரி அமைப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.