Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,449 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் 5,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,62,811 ஆயிரத்தை எட்டியுள்ளது.

மேலும் ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,578 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8,76,225 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |