ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆளை சிறைபிடித்து பொதுமக்கள் அவரை காவல் துறையில் ஒப்படைத்தனர்.
தாளவாடியைச் சேர்ந்த செல்லமுத்து அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் 50க்கும் மேற்பட்ட ஆட்கள் குழுவாக இணைந்து சீட்டு பணம் கட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாகக் கூறிய செல்லமுத்து, அதன்பின்னர் திரும்பவில்லை. பல முறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இன்று தாளவாடியில் உள்ள தனது வாடகை வீட்டை காலி செய்வதற்காக செல்லமுத்து சென்றபோது சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் அவரை சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.