Categories
மாநில செய்திகள்

“இனிமேல்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.”.. எச்சரித்த தலைமைச் செயலாளர்…!!

இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கே சண்முகம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாம் இன்னும் கொரோனா பரவலின் முக்கிய கட்டத்தை தாண்டவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் என்பது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இனிமேல் தான் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மேலும் வர்த்தக நிலையங்கள், அனைத்து அலுவலகங்களும் செயல்பட தொடங்கி இருப்பதாலும் பொது போக்குவரத்து என்பது முழுமையாக உள்ளதாலும் வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொற்று என்பது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரும் மக்களின் நலன்கருதி தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரிவர கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

Categories

Tech |