பிரபல நடிகை கைது செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கின்றது.
நிமிர்ந்து நில்லு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் கடத்தல் பிரிவில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த போதை பொருள் கடத்தலில் கேரள நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக தொடர் விசாரணை நடிகை ராகினி திவேதியிடம் நடந்து வந்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.