Categories
தேசிய செய்திகள்

பயணிகள் விட்டுச்சென்ற “விலை உயர்ந்த பொருட்கள்”… விமான நிலையங்களில் தேக்கம்…!!

விமான நிலையங்களில் பயணிகள் விட்டுச்சென்ற உயர் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2020 ஆண்டு தொடக்கமான ஜனவரி 1ஆம் தேதி முதல் தற்போது வரை விமான நிலையங்களில்,விலை உயர்ந்த உள்ளாடைகள், காலணிகள், ஒயின் பாட்டில்கள், லெதர் ஜாக்கெட்டுகள் என 4689 வகையான பொருட்கள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுதில் விமானங்களில் வந்த பயணிகள் விட்டுச் சென்றதாக கருதப்படுகிறது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் கிடார், மது பாட்டில்கள், சிகரெட்டுகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களும் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. விட்டுச் சென்ற பொருட்களில் உள்ள அழுகும் தன்மை உள்ள பொருட்களை 48 மணி நேரத்திற்குப் பிறகு அழிக்கப்படுவதாகவும், இதர பொருட்கள் 90 நாட்கள் வரை வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் யாரும் வரவில்லை என்றால், ஏலம் விட்டு விடுவதாகவும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |