என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் நிலையில், என்சிசி மாணவர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி, அப்பொழுது கேட்கப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் கொரோனா ஒழிப்பில் முன்களப் பணியாளர்களுக்கு உதவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான என்சிசி மாணவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டி பேசினார்.