Categories
மாநில செய்திகள்

நாளை தான் கடைசி நாள்… மாணவர்களே கவனம்…!!

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தச் சூழலிலும் கல்வி சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை மாநில அரசு மாணவர்களுக்கு கல்வியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

அதாவது இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் இதற்காக விண்ணப்பிக்க தவறியவர்கள் tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றொப்பமிட்டு அதன் நகல்களை இணைத்து தபால் அல்லது கூரியர் மூலம் வருகின்ற 31ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |