Categories
உலக செய்திகள்

உசேன் போல்ட்டுக்கு “கொரோனா”… வெளியான டுவிட்டர் பதிவு…!!

பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓட்டப்பந்தயத்தில் உலகையே வியப்பில் ஆழ்த்திய ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்று உலகிற்கே பெருமை சேர்த்தவர். இவர் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்பின் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக, உடல் நலம் சரி இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் அவர் உலக மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த தன்னுடைய அறிவுரையை ட்விட்டர் பதிவு மூலம் காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |