அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் தெற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் உண்டாகியுள்ளது. இந்த நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் கடலில் ஒரு அதிசயத்தை கண்டுள்ளனர்.
அது என்னவென்றால் ஒரே சமயத்தில் அருகருகே இருந்த ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் மேகம் உறிஞ்சி எடுக்கின்ற காட்சியை கண்டுள்ளனர். அந்தக் காட்சியைக் கண்டவர்கள், ஹாலிவுட் படங்களில் வருவது போல இந்த காட்சி இருந்ததாக கூறியுள்ளனர்.