Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாட்களாக குறைந்த கொரோனா பலி…தமிழக மக்கள் சற்று நிம்மதி…!!!

தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,79,385 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,25,389 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், தற்போது வரை 3,19,327 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 53,541 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 21 நாட்களாக கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 100ஐ கடந்திருந்த நிலையில் தற்போது 2 நாட்களாக 100க்கு கீழ் குறைந்திருப்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |