Categories
தேசிய செய்திகள்

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறப்பு ….!!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு போதும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூஜைகளுக்குப்பின் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 21-ஆம் தேதி வரை ஆவணி மாத பூஜைகள் நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

Categories

Tech |