Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… இன்று ஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,580 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,196 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் டெல்லியில் இன்று 1,310 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 1,37,561 ஆக இருக்கின்றது. மேலும் 10,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |