Categories
சினிமா தமிழ் சினிமா

உடல்நிலையில் முன்னேற்றம்….. தொடர் கண்காணிப்பில் SPB….. மருத்துவர் குழு தகவல்….!!

கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பிரபல பாடகர் SPB யை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் SPBக்கு செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் பல பிரபலங்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் அவர் மீண்டு வர வேண்டும் என தொடர் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அவர் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், இன்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தொடர் செயற்கை சுவாச சிகிச்சை தீவிரமாக அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |