தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்,
அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து அவர் விளையாடுவது உறுதியானதால், ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தொடர்ந்து பல மேட்சுகள் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிசுவநாதன் கூறியதற்கு முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் விளையாடுவதை பார்க்க தான் ஆவலுடன் உள்ளதாகவும், டிக்கெட் கட்டணத்தை டபுள் மடங்கு செலுத்த வேண்டும் என்றாலும், செலுத்தி அவர் ஆட்டத்தை பார்க்க வருவேன் என தெரிவித்துள்ளார்.