தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள நிலையில்,
திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதைப் பொறுத்து முதல்வர் திரையரங்குகள் திறப்பது பற்றி முடிவெடுப்பார். அகில இந்திய அளவிலேயே இன்னும் திரையரங்குகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும், விரைவில் இதுகுறித்து செய்தி வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.