வேதாரண்யத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை நின்றதை அடுத்து உப்பளங்கள் சீரமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கி உப்பு உற்பத்தி தொடக்கம் கொரோனா பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. பொது முடக்க தளர்விற்குபின்னர் மீண்டும் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழையால் அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு போன்ற பகுதிகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மழை நின்றதை அடுத்து பாதிக்கப்பட்ட உப்பளங்கள் சீரமைக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒன்றரை லட்சம் டன் உப்பு இருப்பில் உள்ள நிலையில் ஒரு டன் உப்பு மூட்டை 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.