Categories
உலக செய்திகள்

நம்ப முடியல….. “113 பேர் பாதிப்பு” இதுதான் முதல்முறையா….? சந்தேகத்தை கிளப்பிய அறிவிப்பு…!!

பூடான் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் கையில் எடுக்கக் கூடிய ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு தான். பல்வேறு நாடுகளில் இன்றளவும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,

தற்போது பூடான் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முதல் முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 113 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதால், அந்நாட்டு அரசு 7.5 லட்சம் மக்களை வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தியுள்ளது.

பலநாடுகள் கொரோனா  வருவதற்கு முன்பே ஊரடங்கு அமல்படுத்தியும், பெரும்பாலான நாடுகள் கொரோனாவை தடுப்பதற்காக ஊரடங்கை  அமலில் வைத்திருக்கும் சூழ்நிலையில், பூடான் அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு உலக நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தாமல், இந்த அறிவிப்பு உண்மை தானா? இது தான் முதல் ஊரடங்கா  என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

Categories

Tech |