Categories
தேசிய செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்க புதிய வரித்திட்டம் – பிரதமர் மோடி

நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் மதிப்பளிக்கவும் புதிய வரி திட்டத்தை திரு. மோடி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். வரி வசூலிப்பு முறைகளை எளிமைப்படுத்தும் மற்றும் சீர்திருத்தம் மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கைக்கு இந்த முறை வலு சேர்க்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ஸ்ரீ அனுராக் சிங் தாகூர் வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Categories

Tech |