காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் பர்ன்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிகரி நிஹாரிகா பட் பொறுப்பேற்றுள்ளார் .
இவர் இதற்கு முன் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். அதன்பின், புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமார் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும் இவர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.