காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காஷ்மீர் போலீசுடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட பாதுகாப்பு படையினரை அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தனர்.
அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். என்கவுண்டரில் கொல்லப்பட்ட அந்த பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அசாத் லஹாரி என பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.