Categories
தேசிய செய்திகள்

சோளத்தை தூக்கி வீசி… வண்டியை கவிழ்த்து போலீசார் அராஜகம்… வைரலான வீடியோ… கொந்தளித்த மக்கள்..!!

சோள வியாபாரியின் தள்ளு வண்டியை சப் இன்ஸ்பெக்டர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி மாவட்டத்தில் வருண் குமார் என்ற சப்-இன்ஸ்பெக்டர் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த சோளத்தை எடுத்து ரோட்டில் வீசி அதோடு அந்த வண்டியையும் தலைகீழாக தள்ளியுள்ளார். அவரது இச்செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊரடங்கு காலத்தில் பல பகுதிகளில் காவல் அதிகாரிகளின் இது போன்ற அநாகரீக செயல்கள் அதிகரித்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து உயர் அதிகாரி ஒருவர் சப் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். அதோடு நஷ்டமடைந்த தள்ளு வண்டி உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். அதோடு இத்தகைய கொடும் செயலை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தள்ளுவண்டி உரிமையாளர் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்தாரா அல்லது ஏதேனும் கோபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இப்படி செய்தாரா என்பது சரியாக தெரியவில்லை.

Categories

Tech |