Categories
இந்திய சினிமா சினிமா

“இதனை மனதளவில் வைத்து மகிழ்ச்சியடைவேன்” பாராட்டு மழையில் நனையும் ஸ்ருதி…!!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடலை கேட்டு பலரும் பாராட்டி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் நடிகை ஸ்ருதிஹாசன் எட்ஸ் என்ற ஆல்பத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சியில் உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” உண்மையில் ஒரு வித பயத்தோடு தான் வெளியிட்டேன். ஆனால் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது குழுவினரின் கூட்டு முயற்சி இது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

காதல் திருமணம்தான் செய்வேன் ...

ஏ.ஆர் ரகுமான், ரித்திக் ரோஷன், சுரேஷ் ரெய்னா, மகேஷ் பாபு என பல்வேறு பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்தியதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் இந்த பாராட்டை தலைக்கு ஏற்றாமல், மனதளவில் வைத்து மகிழ்ச்சி அடைவேன். உங்களின் பாராட்டுக்கள் அனைத்துமே என்னை தொடர்ச்சியாக இன்னும் வேகமாக இயங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரபலங்கள் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதள பயனாளர்கள் பலரும் இப்பாடலைக் கேட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். என்னை வாழ்த்திய சமூகவலைத்தள பயனர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |