தமிழகத்தில் இன்று 119 கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவாக மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,07,109 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக6,488 குணமடைந்து வீடு திரும்பியதால், 2,27,575 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 52,759 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.