Categories
மாநில செய்திகள்

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க புதிய நெறிமுறைகள் ….!!

ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோன பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா மையங்கள் ஆகியவைகளை இன்று முதல் இயங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக உள்ள தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, உள்ளிட்ட சில மாநிலங்களில் இவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி அறிகுறி  இல்லாத நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், முகக் கவசம் அணித்து இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நபர்களும் ஆரோக்யா சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும் என்றும் சானிடைசர், ஆக்சி மிட்டர் வைத்துத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6அடி சமூக இடைவேளையை பார்க்கிங் உட்பட எல்லா இடத்திலும் கடைபிடிக்க வேண்டும். யோகா செய்யும் இடங்களில் செருப்புகளோடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |