மயிலாடுதுறையில் காவிரி ஆற்றிலிருந்து சாக்குமூட்டையில் கட்டி நிலையில் 9 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாப்படுகை, கிடப்பா பாலம் அருகில் காவிரி ஆற்றின் படித்துறையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சுவாமி சிலைகள் தண்ணீரில் கிடந்தது. அவற்றை ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் எடுத்து அருகில் உள்ள கோவில் இடத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து இச்சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையில் இருந்த சிறிய அளவிலான பகவதி அம்மன், வெங்கடாசலபதி, இரண்டு பெருமாள் சிலைகள், ஸ்ரீதேவி உள்ளிட்ட 9 சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது.மேலும் கத்தி, மூன்று சூலங்கள் இரண்டு சிறிய விக்கரங்கள், தாம்பாளம் போன்ற பொருட்களும் இருந்தன. சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.