Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.15 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 115,150 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் ஒரே வரிசையில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

உலகம் 18,236,407 முழுவதும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், 11,446,278 மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இருக்கின்றது. இதுவரை 692,817 அதிகமான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனவை வெல்வதற்காக மருத்துவமனையில்  6,097,312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 65,754 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதன் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தை தொட்டு மக்களை திணறடித்து வைத்துக் கொண்டிருக்கின்றது.

லட்சக்கணக்கானோர் தினமும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்புவது உலக மக்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது. நேற்று மட்டும் உலக அளவில் புதிதாக 18,226,600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது கவலையை ஏற்படுத்தினாலும் புதிதாக 11,439,262 பேர் வீடு திரும்பியது மக்கலின் நிம்மதியை அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் ( அதிகபட்சமாக ) மீண்டவர்கள் :

இந்தியாவில் 40,349 பேரும், அமெரிக்காவில் 17,314 பேரும், கொலம்பியாவில் 6,531 பேரும், மெக்சிகோவில் 6,229 பேரும், சவுத் ஆப்பிரிக்காவில் 4,766 பேரும், ரஷ்யாவில் 3,649 பேரும், பெரு நாட்டில் 3,352 பேரும், ஈராக் நாட்டில் 2,611 பேரும், சவுதி அரேபியா 2,533 பேரும், அர்ஜெண்டினாவில் 2,527 பேரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |