Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவிற்கு உ.பி. அமைச்சர் பலி

உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேபினட் அமைச்சர் கமல் ராணி வருண் இன்று உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்நயாத் தலைமையிலான அரசில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருண்(62) கடந்த ஜூலை 18ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில் இன்று  சிகிச்சை பலனின்றி  கமலா ராணி உயிரிழந்தார்.

Categories

Tech |