சீனாவில் அதிகாரிகளின் முரட்டு தனத்திற்கு இவர்தான் காரணம் என அமெரிக்காவின் முன்னாள் தூதரான நிக்கி ஹாலே பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது… சீனாவின் அதிகாரிகள் ஜின்பிங் அதிபர் ஆவதற்கு முன்பு திரைமறைவில் தான் ஐ.நா பதவிகளை பிடிக்க வேலை செய்தனர். ஆனால் ஜின்பிங் அதிபரான பிறகு தான் தன்னை ஒரு ராஜா போல் காட்டிக் கொள்வதால் அந்த சாயல் அதிகாரிகளையும் தொற்றிக்கொண்டது. இதனால் அந் நாட்டு அதிகாரிகளும் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தங்களுக்கு வாக்களிக்குமாறு உறுப்பினர்களை மிரட்டுகின்றனர். சீனாவின் அதிகாரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. அடக்கினால் புரட்சி வெடிக்கும் என்பதுதான் வரலாறு. ஹாங்காங், தைவான், தென்சீனக்கடல், இந்தியா போன்ற பல நாடுகளில் சீனா சீண்டி வருகிறது. எதுவானாலும் அமெரிக்காவை சீனா ஒன்றும் செய்ய இயலாது. ஹூண்ட னில் உள்ள சீனாவின் தூதரகத்தை மூடியது சரிதான். அமெரிக்காவின் அறிவு சொத்துரிமை முதல் கொரோனா தடுப்பூசி வரை ஆய்வுகளை சீனா திருடுவதும் உண்மைதான் என்று அவர் கூறியுள்ளார்.