விருதுநகர் அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி அமைய உள்ளது. இதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் கண்மாய், கிணறு, கோவில் மற்றும் உயர் அழுத்த மின் கோபுரங்கள் உள்ளன. மேலும் கல்குவாரி அமைய உள்ள பகுதியின் அருகே பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய சாலை உள்ளது எனவே பகுதியில் கல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.