Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வில் தோல்வி… கடுமையாக திட்டிய பெற்றோர்… மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

தென்காசியில் பெற்றோர் திட்டிய காரணத்தால் பள்ளி மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி ரயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் இருக்கின்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவரது சந்தூர் பிரகாஷ் என்ற 15 வயது மகன் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளார். மறுதேர்வு எழுத இருந்த நிலையில் அவரது பெற்றோர் அவரை மிகவும் கண்டிப்பான முறையில் திட்டியுள்ளனர்.

அதனால் மனமுடைந்த சிறுவன் நேற்று 27ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு இரவு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி இருக்கின்றனர். இருந்தாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து தென்காசி காவல்துறையினரிடம் நேற்று முன்தினம் காலை புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் தென்காசி தாலுகா அலுவலகத்தின் பின்புறம் இருக்கின்ற ஒரு குளத்தில் சந்தூர் பிரகாஷ் பிணமாக கிடந்துள்ளார். அதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி தென்காசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |