தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடை வழக்கின் முந்தைய விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் இது தமிழக அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும் கூறியிருந்தது.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கும் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் அதே நேரத்தில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளது.