Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் கத்திக்காட்டி மிரட்டி செயின் பறிப்பு… இளைஞர் கைது…!!

வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்து அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் செயின் பறிப்பில் ஈடுபட்டது சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சிவகார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த கத்தி, தங்க சங்கிலி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |