Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் தரமில்லாத உணவு… தூக்கி வீசிய நோயாளிகள்..!!

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக கூறி நோயாளிகள் அதனை உண்ணாமல் குப்பைத் தொட்டியில் வீசினார்கள். இதனையறிந்த மருத்துவமனை பணியாளர் நோயாளிகளிடம் இது பற்றி விசாரித்தார். அப்போது நோயாளிகள் அனைவரும், நேற்று வரை வழங்கிய உணவில் எத்தகைய குறையும் இல்லை எனவும் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்த காரணத்தால் உணவு உண்ணாமல் இரவு உணவை புறக்கணித்தோம் என்று கூறினர்.

இதனைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு வேறு உணவு எதுவும் ஏற்பாடு செய்து தரவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டிய அரசு மருத்துவமனைகளில், இவ்வாறான குறைபாடுகள் நிகழ்வதால் நோயாளிகள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் தரமற்ற உணவு வழங்கிய மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உணவகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பெரும்பாலானோர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
.

Categories

Tech |