Categories
உலக செய்திகள்

துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவன்… இரவில் வீடு புகுந்து தூக்கிவிட்டு… பின் அவனை விடுவித்த போலீஸ்… இதுதான் காரணமா?

12 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கி மற்றும் மோப்ப நாய்களுடன் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

பிரிட்டனில் ஒருவர் தான் கருப்பின இளைஞர் ஒருவரை துப்பாக்கியுடன் பார்த்ததாக போலீஸில்  தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் இரவு 11 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடனும் மோப்ப நாய்களுடனும் ஒரு வீட்டை சுற்றி வளைத்தனர். இரவு நேரம் வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் வீட்டிற்குள் நுழைந்து kai என்ற 12 வயது சிறுவனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட சிறுவனை கைவிலங்கு மாட்டி  அழைத்துச்செல்ல போலீஸ் வாகனத்தில்  ஏற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவன் வீட்டில் இருந்தவர்களை வெளியில் போக சொல்லிவிட்டு வீட்டை சோதனை செய்தனர். அதன்பின்னரே போலீசாருக்கு தெரியவந்தது சிறுவன் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என. ஆனால் சிறுவனின் குடும்பத்தார் தாங்கள் கருப்பினத்தவர் என்பதால்தான் இவ்வாறு நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீது விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |