கொரொனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்படும் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் எதும் காட்டக் கூடாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சாம்னா என்ற ஒரு நாளிதழுக்கு பேட்டியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா -க்கு எதிரான போர் இதுவாகும். ஊரடங்கை தளர்த்திய நாடுகள் எல்லாம் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்வதால் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று அனைவரும் கூறுவதை பார்க்க முடிகிறது. பொருளாதாரம் கடும் பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், கொரோனா பெருந்தொற்றால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அந்த பொறுப்பை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? நான் அதிபர் டிரம்ப் அல்ல, எனது மக்கள் என் கண்முன்னால் பாதிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க இயலாது. ஊரடங்கு தளர்வு படிப்படியாகவே தளர்த்தப்பட்ட வேண்டும். மக்கள் மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒரே வேளையில், அனைத்து தளர்வுகளையும் என்னால் அறிவித்துவிட முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.