Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒன்னு கூட தப்பல… உச்சகட்ட பாதிப்பு…. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் | சென்னையில் 93,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,758-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,51,055ஆக உள்ளது.

தமிழக்தில் இதுவரை பதிவாகாத அளவாக இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா பலி 3,409ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முழுவதும் 52,273பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் மட்டும் 13,923பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 73.07 % குணமடைந்துள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 62பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் இன்று கொரோனா உறுதி  கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |