Categories
தேசிய செய்திகள்

ரூ.4 கோடி கேட்டு 6 வயது குழந்தை கடத்தல்….! 12 மணி நேரத்தில் கும்பலை மடக்கிய போலீசார் …!!

4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் தீவிர நடவடிக்கையால் 12 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் ராஜேஷ் குப்தா என்ற வியாபாரி வசித்து வருகிறார். அவரது ஆறு வயது மகனை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்கள். கடத்திச் சென்ற நபர்கள் 4 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கடத்தல் கும்பல் பதுங்கி இருந்த இடத்திலிருந்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். அங்கு நடந்த என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். இத்தகைய கடத்தல் தொடர்பில் ஈடுபட்ட தம்பதி உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

Categories

Tech |