Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்கோ….! ”வலியுறுத்திய சொந்தங்கள்” நர்ஸ் எடுத்த வீபரீத முடிவு …!!

கருங்கல் பகுதியில் விஷ ஊசி போட்டுக் கொண்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் வசித்து வருகின்ற ஹென்றி என்பவரின் மகள் ஆசிகா, அழகியமண்டபம் பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் ஆசிகா-விற்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். ஆஷிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் உறவினர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். இச்சூழ்நிலையில் சென்ற சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் ஆஷிகா இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த  17-ஆம் தேதி ஆசிகா வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தினை ஊசி மூலமாக உடலில் ஏற்றிக் கொண்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஆசிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆசிகாவின் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விஷ ஊசி போட்டுக்கொண்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |