ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்1_ஆம் வகுப்பு முதல் 8_ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது.
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வருகின்ற 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.