சிவன் சன்னதிக்கு வந்த ஆமையை பிடித்து விஷ்ணுவே வந்ததாக கூறி கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜையை நடத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சில்கூர் பெருமாள் ஆலயத்தில் சிவன் சன்னதி ஒன்று உள்ளது. அந்த சன்னதிக்குள் ஆமை ஒன்று நுழைந்துள்ளது. சன்னதிக்குள் நுழைந்த அந்த ஆமையை பிடித்து அதற்கு பூஜைகள் நடத்தியுள்ளனர் அக்கோவிலில் உள்ள அர்ச்சகர்கள்.
விஷ்ணு புராணமான தசாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கூர்மம் என்று கருதப்படும் இந்த ஆமை சிவன் சன்னதிக்கு வந்து இருப்பதால் விரைவில் நாம் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு எழுவோம் என்றும் இதனால் மனித குலம் மேம்படும் என்றும் அவர்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.