Categories
அரசியல்

“பிசிஜி தடுப்பு மருந்து” ICMR கேட்டாங்க…. உடனே செலுத்துங்க…. தமிழக முதல்வர் உத்தரவு…!!

கொரோனா இறப்பை குறைக்க பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்த கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என உலக நாடுகள் மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மருந்துகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இறப்பை குறைப்பதற்காக பிசிஜி என்ற புதிய தடுப்பு மருந்து ஒன்றை ஐ சி எம் ஆர் மனிதர்களுக்கு செலுத்த பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிசிஜி  தடுப்பு மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய ICMR கேட்டதற்கு இணங்க அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். பிசிஜி தடுப்பு மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இறப்பை தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |