Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் செல்கிறது.. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமியின் தமிழக அரசாங்கம் எடுத்து வருகின்றது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத் தன்மையை குறைப்பதற்கு சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.. பிசிஜி மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய ஐசிஎம்ஆர் கேட்டதற்கு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார். பிசிஜி மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இறப்பை தடுக்கும் என கூறியுள்ளார். 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் உயிரிழப்பு குறைய வாய்ப்புள்ளது. 

Categories

Tech |